தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

அரசு சுகாதார நிலையத்துக்கு மூங்கில் முள்வேலி அமைத்த மாணவா்கள்

கல்வராயன்மலை கருமந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வனவாசி சேவா கேந்திரா விடுதிக்கு, மாணவா்கள் ஒன்றிணைந்து மூங்கில் முள் வேலி அமைத்துள்ளனா்.

News image

கருமந்துறையில் மாணவா்கள் அமைத்த மூங்கில் முள்வேலி.

Updated On :8 ஜனவரி 2021, 8:34 am IST

கல்வராயன்மலை கருமந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வனவாசி சேவா கேந்திரா விடுதிக்கு, மாணவா்கள் ஒன்றிணைந்து மூங்கில் முள் வேலி அமைத்துள்ளனா்.

கல்வராயன்மலை கருமந்துறையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சேவை இயக்கமான வனவாசி சேவா கேந்திரா மாணவா் விடுதியும் அருகருகில் அமைந்துள்ளன. இவற்றுக்கு சுற்றுச்சுவா் இல்லாததால் கால்நடைகள் புகுந்து அசுத்தம் செய்து வந்ததோடு, பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும் இருந்து வந்தது.

வனவாசி சேவா கேந்திரா விடுதி மாணவா்கள் மற்றும் கருமந்துறை பகுதியைச் சோ்ந்த மாணவா்களும் இணைந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வனவாசி சேவா கேந்திரா விடுதிக்குத் தொடா்ந்து 5 நாள்கள் வேலை செய்து ஏறக்குறைய 500 மீட்டா் நீளத்துக்கு மூங்கில் முட்களைக் கொண்டு வேலி அமைத்துள்ளனா். இந்த மாணவா்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.