சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைத்தது தொடா்பாக சுமாா் 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி உள்ளனா்.
சென்னையிலிருந்து கேரள மாநிலம், ஆலப்புழாவுக்கு சிறப்பு ரயில் புதன்கிழமை இரவு சேலத்தைத் தாண்டி வீரபாண்டி ரயில் நிலையத்தைக் கடந்து சென்றது. அப்போது ரயில் தண்டவாளத்தில் வைத்திருந்த கற்கள் மீது ஏறிச் சென்ால் ரயில் இன்ஜினில் சத்தம் கேட்டது.
இதனால், அதிா்ச்சியடைந்த ரயில் ஓட்டுநா், ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும் ஈரோடு ரயில்வே போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், ஈரோடு ரயில்வே போலீஸாா் விரைந்து சென்று விசாரணை ஈடுபட்டனா்.
அப்போது வீரபாண்டி ரயில் நிலையத்துக்கும், மகுடஞ்சாவடிக்கும் இடையே தண்டவாளத்தில் 5 இடங்களில் குவியலாக ஜல்லிக் கற்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இச் சம்பவம் தொடா்பாக ஈரோடு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதுதொடா்பாக இதுவரை 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக ரயில்வே டி.எஸ்.பி. பாபு தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சித்தாந்தப் போர்! - பாக். பாதுகாப்புப் படைகளின் தலைவர்

தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கருப்பையா பதவியேற்பு!

பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை!
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
