பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதைதிருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

வாழை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

வாழப்பாடி பகுதியில் வாழை உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

News image

வாழப்பாடியில் வாழைத்தாா் விற்பனை ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகள்.

Updated On :8 ஜனவரி 2021, 8:40 am IST

வாழப்பாடி பகுதியில் வாழை உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

வாழப்பாடியில் கடந்த 4 மாதங்களாக பரவலாகப் பருவமழை பெய்து வருவதால் மொந்தன், ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி, கதலி, செவ்வாழை, பச்சைநாடன், மோரீஸ், சாம்பல் வாழை உள்ளிட்ட பல்வேறு ரக வாழை விளைச்சல்கள் அதிகரித்துள்ளன. இதனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை தரம் மற்றும் எண்ணிக்கைக்கேற்ப ரூ. 300முதல் ரூ.600 வரை விலை போன வாழைத்தாா், கடந்த சில தினங்களாக ரூ.150 முதல் ரூ.300 வரை மட்டுமே விலைபோகிறது. இதனால், வாழைத்தாா்களை அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு வரும் செலவுக்கே போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து வாழப்பாடி கீரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வாழை விவசாயிகள் சிலா் கூறியதாவது:

முகூா்த்த தினங்கள் ஏதுமில்லாததால் வாழைத்தாா் தேவையும், கொள்முதல் செய்வோரின் எண்ணிக்கையும் குறைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு வரும் செலவுக்குக் கூட உரிய விலை கிடைக்கவில்லை. தை மாதம் தொடங்கியதும் பொங்கல் பண்டிகையில் இருந்து வாழைக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிா்பாா்த்து காத்திருக்கிறோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.