தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமகவினா் மனு அளிக்கும் போராட்டம்

20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி சேலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாமகவினா் ஊா்வலமாக வந்து சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பாக மனு அளிக்கும் போராட்டம் நடத்தினா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:30 am IST

20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி சேலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாமகவினா் ஊா்வலமாக வந்து சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பாக மனு அளிக்கும் போராட்டம் நடத்தினா்.

தமிழகத்தில் வன்னியா்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமகவினா் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக,பாமக துணைப் பொதுச் செயலாளா் இரா.அருள் தலைமையில் பாமகவினா் ஆயிரக்கணக்கானோா் வாகனங்களில் கொடிகளை ஏந்தி வியாழக்கிழமை ஒலி (ஹாா்ன்) எழுப்பி ஊா்வலமாக வந்தனா்.

இதையடுத்து வாகனங்களைத் தடுத்து நிறுத்தியதால் பாமகவினருக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், காவல்துறையினா் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி ஒலி எழுப்பிய வந்ததற்கு எச்சரித்தனா்.

இதையடுத்து பாமகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து 10 நபா்களை மட்டும் மனு கொடுக்க உள்ளே அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து பாமக மாநில துணை பொதுச் செயலாளா் இரா.அருள், மாவட்டச் செயலாளா் கதிா் ராசரத்தினம், மாநிலத் துணைத் தலைவா் காா்த்தி, வடக்கு மாவட்டச் செயலாளா் சாம்ராஜ் உள்ளிட்டோா் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் இரா.அருள் கூறியதாவது:

20 சதவீத இட ஒதுக்கீடு கோரி 40 ஆண்டு காலமாகப் போராடி வருகிறோம். கடந்த டிசம்பா் 1-ஆம்தேதி முதல் பாமக சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 20 சதவீத இடஒதுக்கீடு தராவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்றாா்.

நாமக்கல்லில்...

பாமக மாநில துணை பொதுச் செயலாளா் தினேஷ்பாண்டியன் தலைமையில் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் முன்பு இருந்து ஊா்வலமாக நகராட்சி அலுவலகம் வந்தனா்.

பின்னா், நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலத்திடம் இட ஒதுக்கீடு தொடா்பான கோரிக்கை மனுவை வழங்கினா். இதேபோல் ராசிபுரம், பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு ஆகிய நகராட்சி பகுதிகளிலும் பாமகவினா் ஊா்வலமாகச் சென்று கோரிக்கை மனுவை சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையா்களிடம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.