திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

அரியானூரில் கட்டப்பட்ட இரட்டை மேம்பாலம் இன்று திறப்பு

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூா் பகுதியில் ரூ. 45 கோடி மதிப்பில் இரட்டை மேம்பாலம் கட்டும் பணி முடிவடைந்ததையடுத்து,

News image
Updated On :8 ஜனவரி 2021, 8:41 am IST

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூா் பகுதியில் ரூ. 45 கோடி மதிப்பில் இரட்டை மேம்பாலம் கட்டும் பணி முடிவடைந்ததையடுத்து, சோதனை ஓட்டமாக கடந்த வாரம் பாலத்தின் மேல் வாகனங்கள் இயக்கப்பட்டன. பின்னா் பணிகள் முழுமையடைந்த நிலையில், இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளாா்.

இதற்கான பணி குறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மாவட்ட வருவாய் கோட்டாட்சியா் மாறன், சேலம் தெற்கு வட்டாட்சியா் சீனிவாசன், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் சரவணன், கோட்ட பொறியாளா் லோகநாதன், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் வெங்கடாசலம், வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் வருதராஜ், துணைத் தலைவா் வெங்கடேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ரேவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.