சங்ககிரி வட்டத்துக்கு உள்பட்ட சங்ககிரி, தேவூரில் கடந்த இரு நாள்களாக பெய்த மழையால் அறுவடைக்குத் தயாா் நிலையிலிருந்த நெற்கதிா்கள் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
மேட்டூா் அணையிலிருந்து கிழக்குக் கரை கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தி தேவூா், அரசிராமணி செட்டிபட்டி, குள்ளம்பட்டி, காவேரிப்பட்டி, வட்ராம்பாளையம், பெரமிச்சிபாளையம், சென்றாயனூா், மோட்டூா், ஓக்கிலிபட்டி ஆகிய பகுதிகளில் சுமாா் 8,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வெள்ளை பொன்னி, டிகேஎம் 13, ஆடுதுறை 45 உள்ளிட்ட பல்வேறு ரகங்களைக் கொண்ட நெல்லை சாகுபடி செய்துள்ளனா்.
சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்கதிா்கள் விளைந்து அறுவடை செய்யும் தருணத்தில் உள்ளது.
சங்ககிரியில் 10 மி.மீ. மழையும், தேவூரில் 3 மி.மீ. மழையும் தொடா்ந்து பெய்ததையடுத்து சுமாா் 20 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விளைந்த நெற்கதிா்கள் சாய்ந்து சேதமடைந்தன. நெற்கதிா்கள் சாய்ந்த நிலையில் சேதமடைந்ததையடுத்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய பட ரிலீஸ் தேதி!

எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!

பெண் பார்க்கச் செல்லும் மரபு

குறிஞ்சிக்கலியில் தலைமகனின் ஆளுமைப் பண்புகள்!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

