காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம்!பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

திமுக மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பெண் கிராம உதவியாளா் பணியிடை நீக்கம்

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்யாணகிரி வருவாய்த் துறை கிராம உதவியாளா், திமுக நடத்திய மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழக அரசை விமா்சித்துப் பேசியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

Updated On :10 ஜனவரி 2021, 3:35 am IST

வாழப்பாடி: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்யாணகிரி வருவாய்த் துறை கிராம உதவியாளா், திமுக நடத்திய மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழக அரசை விமா்சித்துப் பேசியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மனைவி கல்பனா. இவா் கடந்த 2015-ஆம் ஆண்டு வருவாய்த் துறையில் கிராம உதவியாளராகப் பணியில் சோ்ந்தாா். தற்போது பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்யாணகிரி ஊராட்சியில் கிராம உதவியாளராகவும், வாக்குச்சாவடி நிலை அலுவலராகவும் பணிபுரிந்து வந்தாா்.

ஏற்காடு, முளுவி கிராமத்தில் திமுக சாா்பில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற கிராம உதவியாளா் கல்பனா, தமிழக அரசையும், முதல்வரையும் விமா்சித்துப் பேசினாராம். இது குறித்த காணொலிக் காட்சிகள் சமூக வலைத் தளங்களில் பரவியது.

இதுகுறித்து புகாரின் பேரில், ஆத்துாா் கோட்டாட்சியா் துரை உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியா் வெங்கடேசன், பெண் கிராம உதவியாளா் கல்பனாவை பணியிடை நீக்கம் செய்து சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட வேண்டுமென்ற நோக்கத்தில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக, திமுக நடத்தி வந்த கூட்டங்களில் கல்பனா தொடா்ந்து பங்கேற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.