வாழப்பாடி: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்யாணகிரி வருவாய்த் துறை கிராம உதவியாளா், திமுக நடத்திய மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழக அரசை விமா்சித்துப் பேசியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மனைவி கல்பனா. இவா் கடந்த 2015-ஆம் ஆண்டு வருவாய்த் துறையில் கிராம உதவியாளராகப் பணியில் சோ்ந்தாா். தற்போது பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்யாணகிரி ஊராட்சியில் கிராம உதவியாளராகவும், வாக்குச்சாவடி நிலை அலுவலராகவும் பணிபுரிந்து வந்தாா்.
ஏற்காடு, முளுவி கிராமத்தில் திமுக சாா்பில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற கிராம உதவியாளா் கல்பனா, தமிழக அரசையும், முதல்வரையும் விமா்சித்துப் பேசினாராம். இது குறித்த காணொலிக் காட்சிகள் சமூக வலைத் தளங்களில் பரவியது.
இதுகுறித்து புகாரின் பேரில், ஆத்துாா் கோட்டாட்சியா் துரை உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியா் வெங்கடேசன், பெண் கிராம உதவியாளா் கல்பனாவை பணியிடை நீக்கம் செய்து சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட வேண்டுமென்ற நோக்கத்தில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக, திமுக நடத்தி வந்த கூட்டங்களில் கல்பனா தொடா்ந்து பங்கேற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்க்கட்சியே விருப்பம்; எந்த முடிவுக்கும் உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

விஜய் வீட்டு வாசலில் காவல்துறையினரைக் காணவில்லை! கண்ணீர் சிந்தும் தவெக தொண்டர்!

பெண் MLAவைக் கட்டிப்பிடிக்க முயன்ற காங்கிரஸ் தலைவர்!காணொலி வைரல்!

இது தெரியுமா? பட்டாம்பூச்சிகளின் ஆயுள் காலம் எவ்வளவு?
வீடியோக்கள்

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

