சங்ககிரி: சேலம் மண்டல கனிம வளத்துறை பறக்கும்ப டையினா் திடீா் சோதனை நடத்தியதில், சங்ககிரி புதிய எடப்பாடி சாலையில் உரிய அனுமதியில்லாமல் சுண்ணாம்பு கற்களை எடுத்துச் சென்ற லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
சங்ககிரி பகுதிகளில் அரசின் உரிய அனுமதியில்லாமல் கற்கள் வெட்டி எடுத்துச் செல்லப்படுவதாக கனிம வளத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து சேலம் மண்டல பறக்கும் படை உதவி இயக்குநா் வி.சசிகுமாா் தலைமையில் வருவாய் ஆய்வாளா் எஸ்.சண்முகம் உள்ளிட்ட அலுவலா்கள், சங்ககிரி, புதிய எடப்பாடி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது சங்ககிரி அருகே உள்ள நாகிசெட்டிப்பட்டியிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் அரசின் உரிய அனுமதியில்லாமல் சுண்ணாம்பு கற்களை எடுத்துச் செல்வது தெரியவந்துள்ளது.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சுண்ணாம்பு கற்களை எடுத்துச் சென்ற லாரியை சங்ககிரி அருகே உள்ள ஆலத்தூா்ரெட்டிப்பாளையம் செல்லமுத்து மகன் சங்கா் ஓட்டி வந்தது தெரியவந்தது. அதனையடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து சங்ககிரி காவல்நிலையத்தில் ஓப்படைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண் MLAவைக் கட்டிப்பிடிக்க முயன்ற காங்கிரஸ் தலைவர்!காணொலி வைரல்!

இது தெரியுமா? பட்டாம்பூச்சிகளின் ஆயுள் காலம் எவ்வளவு?

இந்தியா வந்துள்ள வியத்நாம் அதிபருடன் அதானி சந்திப்பு!

இளைஞர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் இடைநீக்கம்!
வீடியோக்கள்

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

