கேள்வி: ஒரே நாளில் இறந்து விடுமாமே ஈசல் பூச்சி? ஏன் இப்படி?
பதில்: மெலிதான உடலையும் மிக மிக மெல்லிய இறகுகளையும் கொண்டவை ஈசல்கள். இவற்றுக்கு அந்த மெல்லிய வலுவற்ற இறகுகள் அதன் கடைசிக் காலத்தில்தான் முளைக்கின்றன. அதாவது அவை சாகும் தருவாயில்தான் இந்த இறகுகள் முளைக்கின்றன.
ஆனால், இந்த சிறகுகள் முளைப்பதற்கு முன் - அதாவது முட்டையிலிருந்து புழுவாக இவை வெளிவந்த காலத்திலிருந்து தங்கள் வாழ்நாளை மிக மிக மகிழ்ச்சியாகக் கழிக்கின்றன.
இவற்றின் கடைசி அத்தியாயமான இமேகோ பருவம் ஒரே ஒரு நாளைக் கொண்டது. இந்தக் காலத்தில்தான் சிறகுகள் முளைத்து முழு வளர்ச்சியடைகின்றன. நேற்று வரையில் தரையில் உலவி வந்த ஈசல்கள், சிறகுகள் முளைத்தவுடன் உற்சாகமாக வானில் பறக்க ஆரம்பிக்கின்றன.
இந்த ஒரு நாளில் அவை அநேகமாக சாப்பிடுவதுகூடக் கிடையாது. உற்சாகமாகப் பறந்து வாழ்வைக் கொண்டாடி மடிந்து போகின்றன. வியக்க வைக்கும் இயற்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



