சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

நீதியைத் தேடி !  கவிஞர் இரா .இரவி!

Updated On :6 ஆகஸ்ட் 2025, 5:44 pm IST

நீதியைத் தேடி  அலைய வேண்டிய காலம் வந்தது 
நீதிக்காக உயிர் துறந்த மன்னன் வாழ்ந்த பூமி இது !

தவறு செய்திட்ட மன்னனுடன் ராணியும் சேர்ந்து 
தன் உயிரை மாய்த்திட்ட மாண்புள்ள பூமி இது !

குடிமக்களுக்கு மட்டுமல்ல பசு வந்து மணியடித்ததும் 
கேட்டு அறிந்து நீதி வழங்கிய  மண் நமது மண் !

தவறும் செய்தது தன் மகன் என்றும் தெரிந்தும்
தண்டனை வழங்கிய மன்னன் வாழ்ந்த பூமி இது !

புறாக்களுக்காக தன் சதையை அறுத்து வழங்கிய 
பண்டைய மன்னன் வாழ்ந்த வசந்த பூமி இது !

தாமதமான நீதியும் அநீதி என்று அறிவித்த 
தேசம் நம் அழகிய தேசம் என்பதை உணர்வோம் !

கோடிகள் திருடிய கேடிகள் எல்லாம் நம் நாட்டில் 
கைதாகி பிணையில் வெளி வந்து விடுகின்றனர் !

பசியின் கொடுமையால் ரொட்டி திருடிய ஏழையோ 
பாழும் சிறையில் பரிதவித்து வருகிறான் !

பணக்காரனுக்கு ஒரு நீதியும்  நம் நாட்டில் 
பாமரனுக்கு ஒரு நீதியும் வழங்குதல் முறையோ ?

நடிகர் மது அருந்தி மகிழுந்து ஒட்டி கொலை செய்தார் 
நிரபராதி என்று விடுதலையாகி விட்டார் !

நீதி தேவதையின் கண்ணில் கறுப்புத் துணி 
கட்டியதன் காரணம் என்ன தெரியுமா  ?

பணக்காரன் ஏழை என்ற பாரபட்சமின்றி 
பார்க்காமலே நீதி வழங்க வேண்டும் என்பதற்குத்தான் !

குற்றவாளியை குற்றமற்றவர்  என்றும்  
குற்றமற்றவரை குற்றவாளி என்றும் கூறுவதை !

நீதி தேவதை கண்டு கொள்ளாமல் இருக்க 
நீதி தேவதைக்கு கட்டவில்லை கருப்புத்துணி !

ஒரு அறிஞர் பகலில்  கையில் விளக்குடன்
ஒரு மனிதனாவது தென்படுவானா எனது தேடினார் !

இன்று நம் காலத்தில் நீதி கிடைக்குமா 
என்று தேடி அலைய வேண்டிய அவல நிலை !

இன்றும் கண்ணியமான நீதிமான்கள் பலர்  உள்ளனர் 
இழிவான கண்ணியமற்றவர்களும் சிலர் உள்ளனர் !

கருப்பு ஆடுகளை உடன்  களை எடுப்போம் 
கண்ணியமானவர்களுக்குக்  கரம் கொடுப்போம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.