ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கைகோர்ப்போம்:   கவிஞர் இரா .இரவி 

Published On :6 ஆகஸ்ட் 2025, 5:50 pm IST

எது நம்மைப் பிரிக்கிறது என்ற பார்க்காமல் 
எது நம்மை இணைக்கின்றது என்று பார்ப்போம் !

உலகத்தமிழர்கள் யாவரும் ஒன்றிணைவோம் 
ஒப்பற்ற உயர்ந்த தமிழால் ஒன்றுபடுவோம் !

தமிழைத் தமிழாகவே பேசிப் பழகிடுவோம்
தமிங்கிலம் பரவுவதைத் தடுத்தி நிறுத்திடுவோம் !

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்றனர் அன்று 
ஒன்றுபடுவோம் வாழ்வில் உயர்ந்திடுவோம் !

சாதியை மறப்போம் மதத்தை மறப்போம் 
சகோதரர்களாக அனைவரும் சங்கமிப்போம் !

தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை 
தவிடு பொடியாக்கி ஒன்று சேர்ந்திடுவோம் !

உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ் 
உலகில் தோன்றிய முதலினம் தமிழினம் !

உலகில் தமிழினம் இல்லாத நாடே இல்லை 
உலகம் முழுவதும் பரந்து வாழ்வது தமிழன் !

உலகிற்குப்  பொதுமறை தந்தது தமிழினம் 
உலகம் வியக்கும் கோயில்கள்  கட்டியது தமிழினம் !

கரிகாலன் கட்டினான் கல்லணை அன்று 
காலகாலமாய் நிலைத்து நிற்கின்றது இன்றும் !

வியத்தகு சாதனைகள் நிகழ்த்தியது தமிழினம் 
விண்ணிலும் சாதனைகள் புரிந்தது தமிழினம் !
 

வீரத்தில் யாருக்கும் அஞ்சாத இனம் தமிழினம் 
வீரத்தை உலகிற்குக் கற்பித்த இனம் தமிழினம் !

அச்சம் என்பதை அறியாத இனம் தமிழினம் 
அன்பிற்கு அடிபணியும் இனம்  தமிழினம் !

ஆணவம் அதிகாரம் கண்டு அசராத இனம் 
அகிலத்தை ஆண்ட இனம் தமிழினம் !

சிதறிக் கிடைக்கும் தமிழர்கள் கைகோர்ப்போம் 
சிகரம் தொட அணிவகுப்போம் வாருங்கள் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.