இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

நீதியைத்  தேடி:  கவிஞர்  இரா  .இரவி !

Updated On :23 ஜனவரி 2017, 5:50 pm IST

தன் சதையை  அறுத்து நீதி வழங்கிய 
தன்னிகரில்லா வரலாறு இங்கு உண்டு !

தன் மகனை தேர் ஏற்றிக் கொன்று நீதிக்கு 
தலை வணங்கிய வரலாறு இங்கு உண்டு !

தவறான தீர்ப்பு வழங்கிய மன்னன் 
தன் உயிர் நீத்த வரலாறு இங்கு உண்டு !

பட்டப்பகலில் விளக்குடன் மனிதனைத் தேடிய 
புகழ் பெற்ற பாடல் பலரும் கேட்டதுண்டு !

உச்ச நீதி மன்றத்தில் நீதியைத் தேடி 
உலகம் அலையும் அவலம் நேர்ந்தது !

நடிகரின்   வழக்கு என்றால் விரைவாக 
நீதி வழங்கிய வரலாறு நடந்தது உண்டு !

பெரும் பணக்காரர்கள் என்றால் உடன் 
பெரும்பாடு பட்டு தீர்ப்பு வழங்கியது  உண்டு !

பொங்கலுக்குள் வழங்க வேண்டிய தீர்ப்பு 
பொங்கலுக்குள் வழங்க முடியாது என்றனர் !

பொறுத்து போதும் என்று இன்று 
பொங்கி எழுந்து விட்டனர் மாணவர்கள் !

தாமதமான நீதியும் அநீதிதான் என்பது 
தாமாதமாகப் புரிந்தது நீதிபதிகளுக்கு !

சிறு நெருப்பை பெரும் தீயாக்கி விட்டனர் 
சிந்தையில் போராட்ட குணத்தை வளர்த்தனர் ! 

நீதியின் பிறப்பிடமான தமிழ்மண் மக்கள் 
நீதியைத் தேடி அலையும் அவலம் நேர்ந்தது !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.