பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

காயத்திலிருந்து மீளாத பாபர் அஸாம்: 2-வது டெஸ்டிலிருந்தும் விலகல்

​காயத்திலிருந்து மீளாத பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸாம் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்திலிருந்தும் விலகியுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :2 ஜனவரி 2021, 10:38 pm IST


காயத்திலிருந்து மீளாத பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸாம் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்திலிருந்தும் விலகியுள்ளார்.

கடந்தாண்டு டிசம்பர் 18-ம் தேதி தொடங்கிய நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பயிற்சியின்போது பாபர் அஸாமின் கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, டி20 தொடர் மற்றும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.

இந்த நிலையில் 2-வது டெஸ்ட் ஆட்டத்திலும் அவர் விளையாட மாட்டார் என அணியின் மருத்துவர் சொஹைல் சலீம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:

"பாபர் அஸாம் காயத்தில் முன்னேற்றம் இருக்கிறது. ஆனால், காயத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. அவர் எங்களது கேப்டன், பேட்டிங் வரிசையில் மிகவும் முக்கியமானவர். அதனால் ஆபத்தான முடிவுகளை எடுக்க விரும்பவில்லை. மருத்துவக் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பாகிஸ்தானில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.