அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

4-ஆவது டெஸ்ட்: ஹனுமா விஹாரி விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய வீரர் ஹனுமா விஹாரி காயம் காரணமாக விலகியுள்ளார்.

Updated On :12 ஜனவரி 2021, 5:15 am IST


புது தில்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய வீரர் ஹனுமா விஹாரி காயம் காரணமாக விலகியுள்ளார்.

சிட்னி டெஸ்ட் போட்டியில் அஸ்வினுடன் இணைந்து அபாரமாக ஆடி இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்ட ஹனுமா விஹாரிக்கு தொடைப் பகுதியில் தசைநார் முறிவு ஏற்பட்டுள்ளதால், அவர் கடைசி போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

இது தொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "ஹனுமா விஹாரிக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகே அவருடைய காயத்தின் நிலை குறித்து தெரியவரும். லேசான தசைநார் முறிவாக இருந்தாலும்கூட, அவர் குறைந்தபட்சம் 4 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியமாகும். 4-ஆவது டெஸ்ட் போட்டிக்கு 3 நாள்கள் மட்டுமே உள்ளதால், ஹனுமா விஹாரி விளையாட வாய்ப்பில்லை. இதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர் விளையாடமாட்டார்' என தெரிவித்தன.

கடைசி டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரிக்குப் பதிலாக மயங்க் அகர்வால் களமிறக்கப்படுவார் என தெரிகிறது. இதேபோல் இடது கை பெருவிரலில் காயம் அடைந்த ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக ஷர்துல் தாக்குர் விளையாடுவார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. 4-ஆவது டெஸ்ட் போட்டி வரும் 15-ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.