ஆசிய கோப்பை டி20: இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான்
மகளிர் ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.


மகளிர் ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதவிருந்தன. ஆனால் இந்த ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது. இதனால், லீக் சுற்றுகளில் அதிக புள்ளிகளைப் பெற்றிருந்த இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...