இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியான இந்திய வீராங்கனை சாய்னா நெவால் கடுமையாகப் போராடி வென்றார்.
சர்வதேச தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சாய்னா, 14-வது இடத்தில் உள்ள இந்தோனேஷிய வீராங்கனை லின்டாவினி ஃபனிட்ரியை எதிர்கொண்டார்.
உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் சாய்னாவுக்கு கடும் சவாலை அளித்தார் ஃபனிட்ரி. ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முதல் செட் தொடக்கத்தில் ஃபனிட்ரி 5-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். இதனால் சாய்னாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இறுதியில் 21-17 என்ற கணக்கில் முதல் செட்டை சாய்னா வென்றார். எனினும் இரண்டாவது செட்டில் கடுமையாகப் போராடிய ஃபனிட்ரி 29-27 என்ற கணக்கில் அதனை வென்றார்.
எனினும் இறுதி செட்டை 21-13 என்ற கணக்கில் சாய்னா கைப்பற்றி ஆட்டத்தில் வெற்றி பெற்றார். இப்போட்டித் தொடரில் 3 முறை பட்டம் வென்றுள்ள சாய்னாவுக்கு முதல் சுற்றே கடும் சவாலாக அமைந்தது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தருண் கோனா-அஸ்வின் பொன்னப்பா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் அமைதி ஒப்பந்தம்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

ஆர்எஸ்எஸ் பற்றி ஒரு தலித் நபருக்கு ஏன் கவலை? பிரியங்க் கார்கே குறித்து பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு!

நான் இஷான் கிஷனின் மிகப் பெரிய ரசிகர்: முன்னாள் இந்திய கேப்டன்

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை! செய்திகள் நேரலை
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



