மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜூனியர் உலக கோப்பை: இந்தியா அரை இறுதிக்கு தகுதி

வங்க தேசத்தில் நடைபெற்று வரும் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றது.

News image
Updated On :6 பிப்ரவரி 2016, 10:37 am

வங்க தேசத்தில் நடைபெற்று வரும் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றது.

இன்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் நமீபியாவை 197 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. அணியின் கேப்டன் கிஷன் 6 ரன்களில் ஆட்டம் இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ரிஷாப் பாண்ட் நமீபியா பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கி 96 பந்துகளில் 111 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக எஸ்.என்.கான் 76 ரன்களும், அர்மான் ஜாபர் 64 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய நமீபியா அணி இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியால் 39 ஓவர்களில் 152 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் தொடக்க வீரர் டேவின் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியின் சார்பில் தாகர், அன்மோல்பிரீத் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.