முகமது அலி கல்லுக்குள் ஈரம்
முகமது அலி ஆக்ரோஷமான குத்துச்சண்டை வீரராக திகழ்ந்திருந்தாலும், அமைதியை அதிகம் விரும்பியவர். மற்றவர்களை மகிழ்விப்பதில் அலாதி பிரியம் கொண்டவர். அவர் குத்துச்சண்டை போட்டியில் கொடி கட்டிப் பறந்த காலத்தில் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.










