இந்தோனேசியா ஓபன்: இறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த்

இந்தோனேசியா ஓபன்: இறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த்
Published on
Updated on
1 min read

இந்தோனேசியா ஓபன் பாட்மின்டன் இறுதிப் போட்டுக்கு முன்னேறி உள்ளார் இந்தியாவின் ஸ்ரீகாந்த். தென்கொரியா வீரர் வான் ஹோவை 3 செட்களில் வீழ்த்தி இறுதிச்சுற்றுள் நுழைந்தார்.

இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தாவில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிரணாய் குமாரும், ஸ்ரீகாந்தும் அரையிறுதிக்கு முன்னேறினர். இந்நிலையில் பிரணாய் தோல்வியுற்ற நிலையில், ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். 

மூன்று செட்களாக விளையாடப்பட்ட இந்தப் போட்டியின் முதல் சுற்றில் 21-15 புள்ளிகள் பெற்று முன்னிலை பெற்ற ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றில் 14-21 என்று தோல்வியுற்றார். மூன்றாவது சுற்றில் வெற்றி பெற்றால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் 24-22 என்ற புள்ளிகளில் போரடி வெற்றி பெற்றார் ஸ்ரீகாந்த்.

இந்திய வீரரான பிரணாய் குமாரை மற்றொரு அரையிறுதில் வெற்றி பெற்ற ஜப்பானை சேர்ந்த சகாய் கசூமசாவுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளார் ஸ்ரீகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com