அறிவியல் மாணவன் முதல் ஐபிஎல் வீரர் வரை என தனது கிரிக்கெட் பாதை குறித்து இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் சாய் கிஷோர் மனம் திறந்துள்ளார்.
ஐபிஎல் 15வது பருவத்தின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், குஜராத் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அதில், அவர் கிரிக்கெட் மீது கொண்ட அளவற்ற ஆர்வத்தினால் தனது பொறியியல் படிப்பைக் கைவிட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்தத் தொடங்கிதாகக் கூறினார்.
இந்த ஐபிஎல் போட்டியில் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து கொடுத்து வருகிறார். அவர் கடந்த பருவங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இருப்பினும், அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சாய் கிஷோர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அணிக்காக விஜய் ஹசாரே கோப்பையில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழைகள், இளைஞா்கள், பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: ஆதவ் அா்ஜுனா
நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? உருக்கமாக பதிவிட்ட மு. க. ஸ்டாலின்!

3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி! யார் தெரியுமா?

கூட்டணி கட்சிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! காங்கிரஸ் பங்கேற்குமா?
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

