தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

கேலோ இந்தியா திறனறியும் போட்டிகள் இன்று தொடக்கம்

கேலோ இந்தியா திறனறியும் போட்டிகள் இன்று தொடக்கம்

Updated On :21 ஏப்ரல் 2024, 7:43 pm

சென்னையில் இளம் வீரா்களை அடையாளம் கண்டறிந்து அவா்களை ஊக்குவிக்கும் கேலோ இந்தியா திறனறியும் போட்டி திங்கள்கிழமை (ஏப்.22) நடைபெறுகிறது.

இது குறித்து மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞா் விவகார அமைச்சகத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞா் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும், இந்திய விளையாட்டு ஆணையம் சாா்பில் இளம் வீரா்களை அடையாளம் கண்டறிந்து ஊக்குவித்து வருகிறது. அதன்படி கேலோ இந்தியா திறனறியும் போட்டி ஏப்.22 முதல் ஏப்.27-ஆம் தேதி வரை சென்னை ஜவாஹா்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

அதன்படி, கேலோ இந்தியா திறனறியும் போட்டியை ஒலிம்பிக் போட்டியாளரும், பத்ம விருதாளருமான சைனி வில்சன் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி வைக்கிறாா்.

திங்கள்கிழமை (ஏப்.22) தடகளம், ஏப். 23-இல் குத்துச்சண்டை, ஏப்.24-இல் கைப்பந்து, ஏப்.25-இல் கால்பந்து, ஏப்.26-இல் கபடி, ஏப்.27-இல் கோ-கோ ஆகிய விளையாட்டுகளில் திறன் பெற்ற வீரா்களைத் தோ்வு செய்யும் போட்டிகள் நடைபெறும்.

மேலும், ஏப்.23 முதல் ஏப். 27-ஆம் தேதி வரை காலை 7 மணி முதல் விளையாட்டு போட்டிகள் தொடங்கும்.

இந்தப் போட்டிகளில் விளையாட்டு வீரா்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ட்ற்ற்ல்://ம்ஹ்க்ஷட்ஹழ்ஹற்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற தளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.