இந்தியா- இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இவ்வளவு சாதனைகள் நடக்க வாய்ப்பிருக்கிறது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடிவரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என சம நிலையில் இருக்கிறது.
இந்நிலையில் 3வது போட்டி நாளை ராஜ்கோட்டில் நடக்கவிருக்கிறது. இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை.
இந்தப் போட்டியில் பல சாதனைகள் நடக்க வாய்ப்பிருக்கிறது.
1. இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்டுகள் எடுக்க இன்னும் 1 விக்கெட் தேவை.
2. இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் 700 விக்கெட்டுகள் எடுக்க இன்னும் 5 விக்கெட்டுகள் தேவை.
3. இங்கிலாந்து கேப்டன் தனது 100வது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறார்.
4. இந்தியா சார்பில் 2 புதிய வீரர்கள் அறிமுகமாக வாய்ப்பிருக்கிறது.
ராஜ்கோட் டெஸ்ட் போட்டி மறக்க முடியாத ஒன்றாக மாற அதிகமான வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
விராட் கோலி இல்லாதது மட்டுமே ரசிகர்களுக்கு கவலையாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.