இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் முகமது ஷமியின் கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் அபாரமான பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மென்களை திணறத்த முகமது ஷமிக்கு தீராத கால் வலி இருந்து வந்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக முகமது ஷமி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதன்பின் காயம் காரணமாக இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் முகமது ஷமி இடம்பெறவில்லை.
இதனையடுத்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியுள்ளனர். முகமது ஷமி கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக ஜனவரி கடைசி வாரத்தில் லண்டன் சென்றார். அங்கு கணுக்கால் காயத்துக்காக ஊசிப் போட்டுக்கொண்டார். பின்னர், மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இருப்பினும், ஊசிப் போட்டுக் கொண்டது பலனளிக்காததால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.இதனைத் தொடர்ந்து முகமது ஷமிக்கு நேற்று(பிப்.27) வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், முகமது ஷமி பூரண நலம்பெற பிரதமர் மோடி தனது எக்ஸ்(டிவிட்டர்) தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து முகமது ஷமி ஐபிஎல் தொடரில் விளையாடுவது சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வெடுத்து வருவதாகவும், பூரண குணமடைந்து மீண்டுவர சில காலம் ஆகும் எனவும், இயல்பு நிலைக்கு மீண்டும் வரமீண்டு வருவதை எதிர்நோக்கியுள்ளேன் என்றும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஷமி பதிவிட்டுள்ளார்.