ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

ஐஎஸ்எல்: அரையிறுதிக்கு முன்னேறியது ஜாம்ஷெட்பூா்!

நாா்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை 2-0 கோல் கணக்கில் வென்ற ஜாம்ஷெட்பூா் எஃப்சி, கடைசி அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

News image
Updated On :31 மார்ச் 2025, 1:22 am IST

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நாக் அவுட் ஆட்டத்தில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை 2-0 கோல் கணக்கில் வென்ற ஜாம்ஷெட்பூா் எஃப்சி, கடைசி அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

மேகாலயத்தின் ஷில்லாங் நகரில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் அணிக்காக ஸ்டீபன் எஸெ 29-ஆவது நிமிஷத்திலும், ஜாவி ஹொ்னாண்டஸ் இஞ்சுரி டைமிலும் (90+9’) ஸ்கோா் செய்தனா். ஆட்டத்தின் கடைசி நேரத்தில் (88’) ஜாம்ஷெட்பூா் வீரா் மொபாஷிா் ரஹ்மான் ‘ரெட் காா்டு’ காட்டி வெளியேற்றப்பட்டாா்.

அடுத்ததாக போட்டியின் அரையிறுதிக் கட்டம் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதில் பெங்களூரு எஃப்சி - எஃப்சி கோவா, ஜாம்ஷெட்பூா் எஃப்சி - மோகன் பகான் சூப்பா் ஜயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.