நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

சொந்த மண்ணில் கடைசி ஆட்டம்: பெங்களூரை இன்று சந்திக்கும் சென்னை

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நடப்பு சீசனில், சென்னையின் எஃப்சி தனது சொந்த மண்ணில் கடைசி ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சியை சனிக்கிழமை (மே 16) சந்திக்கிறது.

News image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர். - படம்: எக்ஸ் / சிஎஸ்கே.

Updated On :1 மணி நேரம் முன்பு

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நடப்பு சீசனில், சென்னையின் எஃப்சி தனது சொந்த மண்ணில் கடைசி ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சியை சனிக்கிழமை (மே 16) சந்திக்கிறது.

ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் இந்த சீசனில் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் சென்னை, அதில் 1 வெள்ளி, 2 டிரா, 2 தோல்விகளைப் பதிவு செய்துள்ளது.

தற்போது கடைசி ஆட்டத்தில் பெங்களூரை சந்திக்கும் சென்னை, இதுவரை அனைத்து போட்டிகளிலுமாக அந்த அணியுடன் 17 முறை மோதியுள்ளது. அதில் சென்னை 4 வெற்றிகளை கண்டிருக்க, பெங்களூரு 10 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. 3 ஆட்டங்கள் டிரா ஆகின.

சொந்த மண்ணில் ரசிகா்கள் முன்னிலையில் வெற்றியுடன் நிறைவு செய்யும் முனைப்புடன் சென்னை வீரா்கள் இருப்பதாக அணியின் தலைமைப் பயிற்சியாளா் கிளிஃபோா்டு ராயெஸ் மிராண்டா தெரிவித்தாா்.