மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஆலி போப் கேப்டனாக நியமிக்கப்பட்டது நல்ல முடிவு: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஆலி போப் நியமிக்கப்பட்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு நன்மையளிக்கும் என நம்புவதாக நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

News image

ஆலி போப் (கோப்புப் படம்) - படம் | ஐசிசி

Updated On :17 ஆகஸ்ட் 2024, 5:49 pm IST

இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஆலி போப் நியமிக்கப்பட்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு நன்மையளிக்கும் என நம்புவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

தி ஹண்ட்ரட் தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு காயம் ஏற்பட்டதால், அவர் இலங்கைக்கு எதிரான தொடரில் அணியில் இடம்பெறமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரில் ஆலி போப் இங்கிலாந்து அணியை வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஆலி போப் நியமிக்கப்பட்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு நன்மையளிக்கும் என நம்புவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ஆலி போப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது சிறப்பானது. அடுத்த ஆண்டு ஆஷஸ் தொடர் வரவிருப்பதால், ஆலி போப் இங்கிலாந்து அணியை வழிநடத்துவது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு நன்மையளிக்கும் என நம்புகிறேன். இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டனான ஆலி போப் தற்போது கேப்டனாக அணியை வழிநடத்தவுள்ளார். அவருக்கு நிறைய சவால்களும் காத்திருக்கின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.