திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

முதல் டெஸ்ட்: வங்கதேசம் 316 ரன்கள் குவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்துள்ளது.

News image

படம் | AP

Updated On :23 ஆகஸ்ட் 2024, 7:54 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 21) தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, துணைக் கேப்டன் சௌத் ஷகீல் 141 ரன்கள் எடுத்தார்.

வங்கதேசம் தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஹாசன் மஹ்முத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மெஹிதி ஹாசன் மிராஸ் மற்றும் ஷகிப் அல் ஹசன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். இதனையடுத்து, வங்கதேசம் அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாத்மன் இஸ்லாம் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும். மோமினுல் ஹேக் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முஸ்பிகூர் ரஹீம் 55 ரன்களுடனும், லிட்டன் தாஸ் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

வங்கதேச அணி பாகிஸ்தானைக் காட்டிலும் 132 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.