

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான முதல் டி20 போட்டி லாகூரில் இன்று (ஜனவரி 29) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சைம் ஆயுப் 22 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சல்மான் அகா 39 ரன்களும், பாபர் அசாம் 24 ரன்களும் எடுத்தனர். உஸ்மான் கான் 18 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆடம் ஸாம்பா 4 ஓவர்களில் வெறும் 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சேவியர் பார்ட்லெட் மற்றும் மஹ்லி பியர்டுமேன் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.