அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து! மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!
/

மகாராஷ்டிர அரசின் முடிவை வரவேற்கிறேன்: சச்சின் டெண்டுல்கர்

மகாராஷ்டிர அரசின் முடிவை வரவேற்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

News image

சச்சின் டெண்டுலர் (கோப்புப் படம்)

Updated On :29 ஆகஸ்ட் 2024, 6:51 pm IST

தனது குழந்தைப்பருவ பயிற்சியாளரான ராமகந்த் அச்ரேக்கரின் சிலையை சிவாஜி பூங்காவில் திறக்கும் மகாராஷ்டிர அரசின் முடிவை வரவேற்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசின் நகர்புற வளர்ச்சித் துறையின் சார்பாக சிவாஜி பூங்காவில் கிரிக்கெட் பயிற்சியாளரான ராமகந்த் அச்ரேக்கரின் 6 அடி சிலையை 5-வது நம்பர் வாசலுக்கு அருகே நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசின் இந்த முடிவை வரவேற்று சச்சின் டெண்டுல்கர் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: அச்ரேக்கர் சார் என்னுடைய வாழ்க்கையிலும், மேலும் பலரது வாழ்க்கையிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது அனைத்து மாணவர்களின் சார்பாக நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

அவரது வாழ்க்கை சிவாஜி பூங்காவில் கிரிக்கெட்டை மட்டுமே மையமாக வைத்து இயங்கிக் கொண்டிருந்தது. அவர் பல ஆண்டுகளாக பயிற்சியளித்து வந்த சிவாஜி பூங்காவில் அவரது நினைவாக சிலை நிறுவ வேண்டும் என்ற மகாஷ்டிர அரசின் முடிவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது எனப் பதிவிட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் உள்பட 12 இந்திய வீரர்களுக்கு பயிற்சியளித்துள்ள அச்ரேக்கருக்கு கடந்த 1990 ஆம் ஆண்டு துரோணாச்சாரியா விருது வழங்கப்பட்டது.

சச்சின் டெண்டுல்கரை தவிர்த்து, ராம்நாத் பார்க்கர், பல்விந்தர் சிங் சாந்து, லால்சந்த் ராஜ்புட், சந்திரகாந்த் பண்டித், பிரவின் அம்ரே, சமீர் திஹே, வினோத் காம்ப்ளி, சஞ்சய் பங்கார், பராஸ் மாம்ப்ரே, ரமேஷ் பவர் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோருக்கு அச்ரேக்கர் பயிற்சியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.