திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இந்தியாவுக்கு தைரியம் அதிகம்: முன்னாள் இங்கிலாந்து வீரர் புகழாரம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் விளையாட்டு வியப்பை ஏற்படுத்துவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலைஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

News image
ஸ்டார்க்கிடம் வம்பிழுத்த இந்திய வீரர் ஜெய்ஸ்வால்- படம்: ஏபி
Updated On :3 டிசம்பர் 2024, 10:29 am

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் விளையாட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலைஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட்டில் ஆஸி.யை வீழ்த்தியது.

இங்கிலாந்தில் ஜெய்ஸ்வால் 700 ரன்கள் அடித்து அசத்தினார். தற்போது, ஆஸ்திரேலியாவுடனும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இதுவரை ஜெய்ஸ்வால் 15 போட்டிகளில் 1,568 ரன்கள் குவித்துள்ளார்.

இங்கிலாந்துக்காக முதன்முதலாக 10,000 ரன்கள் எடுத்த டெஸ்ட் பேட்டராக அலைஸ்டர் குக் இருக்கிறார் . அவர் பார்டர் -கவாஸ்கர் குறித்து பேசியதாவது:

இந்தியாவின் தைரியம் பிடித்திருக்கிறது

இந்தியா மிகவும் தைரியமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். முதல் இன்னிங்ஸில் 150க்கு ஆல் அவுட் ஆகி ஆஸி. வெற்றி பெறும் என நினைக்கும்போது இந்தியர்கள் ‘நாங்கள் ஆஸியை வீழ்த்துவோம்’ என்பதுபோல் சிறப்பாக விளையாடினார்கள்.

இரு அணிகளுக்கு கடினமாகதான் இருந்திருக்கும். பல கேப்டனும் பந்துவீச்சைதான் தேர்ந்தெடுத்திருப்பார்கள். அதனால் மோசமான விளைவுகளையே சந்தித்திருப்பார்கள். ஆனால், இந்திய அணி சிறப்பாக கையாண்டது. இது முழுமையான சிறப்பான செயல்பாடுகளை கொண்டிருந்தது.

150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அங்கிருந்து மீண்டு வருவதை யாரும் நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள். ஜஸ்ப்ரீத் பும்ரா புதிய பந்தில் அந்த மாதிரியான விக்கெட்டுகளை எடுத்து அணியை வழிநடத்தும்போது அனைவருக்கும் நம்பிக்கை பிறக்கிறது.

500 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின் இல்லாமல் விளையாடினார்கள். எவ்வளவு தைரியம்? நானாக இருந்தாலும் அஸ்வினுடன் சென்றிருப்பேன். ஆனால், இந்தியாவின் முடிவு மிகச்சிறப்பாக இருந்தது.

ஸ்டார்க்கிடம் அப்படி பேசியிருக்க வேண்டியதில்லை

ஆஸி. இப்படி தோற்கும்போது பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஜெய்ஸ்வால் மிட்செல் ஸ்டார்க்கிடம் பந்து மெதுவாக வருகிறதென கிண்டல் செய்கிறார். சதமோ, மிகப்பெரிய ரன்களோ அடிக்காமல் அப்படி சொல்லியிருக்கிறார். நான் ஸ்டார்க்கிடம் விளையாடியுள்ளேன். அவர் அவ்வளவு மெதுவாக வீசுவதில்லை.

நானாக இருந்தால் அமைதியாக விளையாடியிருப்பேன். 22 வயதில் இந்தளவுக்கு நம்பிக்கை இருப்பதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

ஆனால், ஸ்டார்க் அப்படியே வீசியிருந்தாலும் ஜெய்ஸ்வால் அவ்வாறு சொல்லியிருக்க வேண்டியதில்லை.

இங்கிலாந்தைவிட ஆஸி.க்கு எதிராக இப்படி ரன்களை குவித்து கொண்டாடுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

டாப் ஆர்டரில் விளையாடி 15 போட்டிகளில் அதிகமான ரன்களை குவித்துள்ளார். கிளாசிக்கலான வீரர் ஜெய்ஸ்வால். பெர்த்தில் விளையாடுவது கடினம். ஆனால், இந்தியா சிறப்பாக விளையாடியது. இது புதிய ஆடுகளகமாக இருந்தாலும் வரலாற்று சிறப்புமிக்க திடலில் ஆஸி.யை வீழ்த்துவது சாதாரணமில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.