வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

100-வது முறை... டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் புதிய சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

News image

ஜோ ரூட் - படம் | AP

Updated On :7 டிசம்பர் 2024, 9:34 pm IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 378 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி நியூசிலாந்தைக் காட்டிலும் 533 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

100-வது முறை...

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். அவர் 73 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 முறை அரைசதம் கடந்து ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 முறை அரைசதம் கடந்த முதல் வீரர் என்ற பெருமையும் இவரைச் சேரும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை அரைசதம் கடந்த வீரர்கள்

சச்சின் டெண்டுல்கர் - 119 முறை

ஜாக் காலிஸ் - 103 முறை

ரிக்கி பாண்டிங் - 103 முறை

ஜோ ரூட் - 100* முறை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.