பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

முன்கூட்டியே பயிற்சியை தொடங்கிய இந்திய அணி..! மீண்டு வருமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டுக்கான பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக பிசிசிஐ விடியோ வெளியிட்டுள்ளது.

News image

தீவிர பயிற்சியில் இந்திய அணி - படங்கள்: எக்ஸ் / பிசிசிஐ

Updated On :10 டிசம்பர் 2024, 6:15 pm IST

பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

3ஆவது டெஸ்ட் போட்டி டிச.14ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவிருக்கிறது. ஆஸி. பிரிஸ்பேன் சென்றுவிட்டது. இந்தியா அணி நாளைதான் (டிச.11) செல்கிறது.

அடிலெய்டில் தங்கியுள்ள இந்திய அணி சிவப்பு நிற பந்தில் பயிற்சி எடுத்து வருகிறது. குறிப்பாக டிஃபன்ஸ், பந்துகளை விடுவதில் கவனம் செலுத்தி வருகிறது.

தீவிர பயிற்சியில் இந்திய அணி

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். கடந்த 12 இன்னிங்ஸில் 142 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்கியதால் ரோஹித் நம்.6இல் விளையாடினார்.

விராட் கோலி முந்தைய போட்டியில் சதமடித்தாலும் இன்னும் பழைய ஃபார்மினை மீட்க போராடி வருகிறார்.

கே.எல்.ராகுல் டிஃபன்சிலும் ரிஷப் பந்த் பிக்கப் ஷாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இது குறித்து பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டு கூறியுள்ளதாவது:

நாளைக்கான நேரம் இது. பிரிஸ்பேன் டெஸ்ட்டுக்கான பயிற்சி அடிலெய்டில் தொடங்கியது எனக் குறிப்பிட்டுள்ளது.

ஹர்சித் ராணா, ஆகாஷ் தீப், யஷ் தயால், ஜடேஜா, அஸ்வின், சுந்தர் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

பும்ரா, சிராஜ், நிதீஷ்குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர் 1-1 சமநிலையில் உள்ளது. அடுத்த போட்டியில் இந்திய அணி மீண்டு வருமா என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.