குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

காபா பிட்ச் எப்படி தயாராகிறது? பிட்ச் மேற்பார்வையாளரின் பேட்டி!

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறவிருக்கிறது.

News image

காபா பிட்ச் - படம்: எக்ஸ் / கிரிக்கெட் ஆஸ்திரேலியா

Updated On :11 டிசம்பர் 2024, 5:33 pm IST

கடந்தமுறை பார்டர் கவாஸ்கர் தொடரில் 1988க்குப் பிறகு முதல்முறையாக பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா இந்தியாவிடம் தோல்வியுற்றது. இதைத் தொடர்ந்து மே.இ.தீவுகள் அணியிடமும் தோல்வியுற்றது.

வரும் சனிக்கிழமை (டிச.14) 3ஆவது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. தற்போது, 1-1 என சமநிலையில் இருக்கிறது.

கடந்தமுறை உள்ளூர் பிங்க் பந்தில் முதல்நாளிலே 15 விக்கெட்டுகள் விழுந்தன. அதேபோல் அமைக்கவிருப்பதாக பிட்ச் மேற்பார்வையாளர் கூறியுள்ளார்.

இந்திய அணி பிரிஸ்பேன் சென்றடைந்தது. பிசிசிஐ விடியோ வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

வழக்கமான காபா பிட்ச்

இந்த நிலையில் காபாவின் பிட்ச் மேற்பார்வையாளர் டேவிட் சந்துர்ஸ்கி கூறியதாவது:

ஒரு ஆண்டின் பல்வேறு நிலைகளில் பிட்ச்கள் பல்வேறு விதமாக இருந்திருக்கின்றன. தொடக்கத்தில் பிட்ச்கள் பசுமையாக இருக்கும். பின்னர், அடுத்தடுத்த செஷன்களில் பிட்ச்கள் தேய்மானமாகும்.

காபா பிட்ச் எதற்கு பெயர்போனதோ அதேமாதிரியாக வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாகவும் பௌன்சர்களும் இருக்குமாறு தயாரிக்கவிருக்கிறோம்.

பொதுவாக ஒவ்வொரு வருடமும் காபா பிட்ச்சினை எப்படி தயாரிப்போமோ அப்படித்தான் இந்தமுறையும் தயாரிக்க முயற்சிக்கிறோம்.

பேட்டர்கள், பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் சாதகமாக பிட்ச் அமைக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். ஆனால், எல்லாவற்றுக்கும் ஏற்றதுபோல் இருக்குமென நம்புகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.