தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

9 ஆண்டுகளுக்குப் பிறகு டாப் 10 தரவரிசையில் கீழிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்..! மீண்டு வருவாரா?

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டர் ஸ்டீவ் ஸ்மித் 9 ஆண்டுகளுக்குப் பிறகு டாப் 10 தரவரிசையில் இருந்து கீழிறங்கியுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் - படம்: ஏபி

Published On :

ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த டெஸ்ட் பேட்டரான ஸ்டீவ் ஸ்மித் பும்ரா ஓவரில் முதல் டெஸ்ட்டில் முதல்முறையாக சொந்த மண்ணில் கோல்டன் டக் அவுட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் மோசமாக விளையாடி வருகிறார்.

111 டெஸ்ட் போட்டிகளில் 9,704 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஓராண்டாக ஃபார்மில் இல்லாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, சராசரி 56.09ஆக இருக்கிறது. இதற்கு முன்பு 64 சராசரியுடன் விளையாடியுள்ளார்.

இந்த நிலையில் ஐசிசி தரவரிசையில் 11ஆவது இடத்துக்கு கீழிறங்கியுள்ளார். 2015இல் இருந்து முதல்முறையாக டாப் 10இல் இருந்து கீழிறங்கியுள்ளது.

தற்போது, விளையாடும் பேட்டர்களிலேயே அதிகபட்ச 947 புள்ளிகள் பெற்று அசத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டான் பிராட்மேன் அதிகபட்சமாக 961 புள்ளிகள் பெற்று டெஸ்ட்டில் ஐசிசி ஆல்டைம் தரவரிசையில் முதலிடத்தில் நீடிப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவ் ஸ்மித் மீண்டுவந்து பிராட்மேன் சாதனையை முறியடிப்பாரா என ஆஸ்திரேலிய ரசிகர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.