
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெர்த்தில் உள்ள வாகா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சொதப்பினாலும் பின் வரிசையில் வந்தவர்களின் சிறப்பான ஆட்டத்தால், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக அனபெல் சதர்லேண்ட் 110 ரன்களும், கேப்டன் டாஹ்லியா மெக்ராத் 56 ரன்களும், ஆஸ்லே கார்ட்னெர் 50 ரன்களும் விளாசினர்.
இந்திய அணித் தரப்பில் அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.