திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் கோப்பை வெல்வதே இலக்கு..! ஸ்ரேயாஷ் ஐயர் பேட்டி!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பை வெல்வதே முக்கியமான இலக்கு என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

News image

ஸ்ரேயாஷ் ஐயர்.

Updated On :21 டிசம்பர் 2024, 4:22 pm IST

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பை வெல்வதே முக்கியமான இலக்கு என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

2020இல் ரிக்கி பாண்டிங் தில்லை அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருக்கும்போது இறுதிப்போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரிக்கி பாண்டிங் பஞ்சாப் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கிறார்.

ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஷ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரராக மாறி ஸ்ரேயாஷ் ஐயர் சாதனை படைத்துள்ளார்.

அதனால், இவர்தான் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் ஸ்ரேயாஷ் ஐயர் கூறியதாவது:

ரிக்கி பாண்டிங்குடன் பற்றி தெரியும்

ரசிகர்கள் மனநிலை என்னவாக இருக்குமென புரிந்துகொள்ள முடிகிறது. ரிக்கி பயிற்சியாளராக இருக்கிறார். அவருடன் ஏற்கனவே நல்ல நட்புறவு இருக்கிறது. பல விஷயங்களில் நாங்கள் இருவரும் சேர்ந்து குழுவாக சிந்தித்து செயல்படுவோம். அதை முதல் போட்டியில் இருந்தே செயல்படுத்துவோம்.

பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் கோப்பை வெல்வதே இலக்கு

பஞ்சாப் அணியில் இணைந்தது மகிழ்ச்சி. அணியில் சேர்வதற்கு காத்திருக்க கடினமாக இருக்கிறது. இந்தாண்டு 2 கோப்பைகளை வென்றிருக்கிறேன். என்னுடைய முதன்மையான நோக்கம் ஐபிஎல் கோப்பையை பஞ்சாப் அணிக்காக வெல்ல வேண்டும்.

சையத் முஷ்டக் அலி கோப்பை வென்றது நம்பமுடியாத உணர்வைக் கொடுத்தது. இதற்காக கடினமான உழைத்திருக்கிறோம். அணியின் வீரர்கள் சிறப்பாக உழைத்தார்கள் என்றார்.

தற்போது விஜய் ஹசாரோ கோப்பையில் விளையாடி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.