விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மன்மோகன் சிங் மறைவு: கறுப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்!

மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கறுப்புப் பட்டையுடன் விளையாடும் இந்திய வீரர்கள்...

News image
Updated On :27 டிசம்பர் 2024, 8:01 am IST

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, கையில் கறுப்புப் பட்டை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் பாடர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகின்றது. மெல்போர்னில் நடைபெற்று வரும் நான்காவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று அதிகாலை(இந்திய நேரப்படி) தொடங்கியது.

இந்த நிலையில், மைதானத்துக்கு பீல்டிங் செய்ய வந்த இந்திய அணியினர் அனைவரும் கையில் கறுப்புப் பட்டை அணிந்து வந்தனர்.

வீரர்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ள பிசிசிஐ, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரர்கள் தங்களின் கைகளில் கறுப்புப் பட்டை அணிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.