சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

லக்னௌ அணி தன்னை தக்கவைக்காதது குறித்து மனமுடைந்த ஆப்கன் வீரர்!

லக்னௌ அணி தன்னை தக்கவைக்காதது குறித்து ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக் கூறியதாவது...

News image

ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக் - படங்கள்: இன்ஸ்டா / நவீன் உல் ஹக்

Updated On :7 நவம்பர் 2024, 3:06 pm IST

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணி 2025ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான தக்கவைப்பு வீரர்கள் பட்டியலில் ஆப்கன் வேகப்பந்து வீச்சாளரை தக்கவைக்கவில்லை. கேப்டன் கே.எல்.ராகுலையும் விடுவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிகோலஸ் பூரன், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், மோஷின் கான், ஆயுஷ் பதோனி ஆகியோரை தக்கவைத்ததாக எல்எஸ்ஜி அணி அறிவித்தது.

2024ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் நவீன் உல் -ஹக் 14 விக்கெட்டுகளும் எகானமி 10.19ஆகவும் பந்து வீசியிருந்தார்.

விராட் கோலியுடன் சண்டையிட்டு மிகவும் பிரபலமானார். பின்னர் கடந்தாண்டு இருவரும் நண்பர்களாகியதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் ஏலம் வரும் நவ.24, 25ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஆப்கன் வீரர் நவீன் உல்-ஹக் தனது இன்ஸ்டாகிராமில் கூறியதாவது:

கடந்த 2 ஆண்டுகளாக இந்த அற்புதமான அணியில் எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி. அணியின் வருங்காலத்துக்கும்m அணியின் வெற்றிக்கு பாடுபடும் நிர்வாகக் குழுவினர்களுக்கும் எனது வாழ்த்துகள். எல்எஸ்ஜி அணியை எப்போதும் மறக்கமுடியாது. அனைவருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.