கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

ஆஸி. தடுமாற்றம்: பாகிஸ்தான் வரலாற்று வெற்றி..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

News image

வெற்றிக் கொண்டாட்டத்தில் பாகிஸ்தான் அணியினர். - படம்: எக்ஸ் / பாகிஸ்தான் கிரிக்கெட்.

Updated On :8 நவம்பர் 2024, 3:18 pm IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி ஆஸி.க்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டியில் வென்ற ஆஸி. அணி 2ஆவது போட்டியில் மிகவும் மோசமாக விளையாடி 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் 26.3 ஓவரில் 169/1 ரன்கள் எடுத்து வென்றது.

ஆஸி. சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானின் பேட்டர் சைம் ஆயூப் 86* ரன்கள், அப்துல்லா ஷபிக்கு 64 ரன்கள், பாபர் அசாம் 15* ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்கள்.

பாகிஸ்தானின் வேகப் பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஒருநாள் போட்டிகளில் 2ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் ஹாரிஷ் ராஃப்.

1-1 என தொடரில் சமநிலையில் இருக்கிறது பாகிஸ்தான் - ஆஸி. 3ஆவது போட்டியில் கம்மின்ஸ் உள்பட மூத்த வீரர்கள் விளையாடமாட்டார்கள் என்பதால் தொடரை வெல்ல பாகிஸ்தானுக்கு நல்லதொரு வாய்ப்பு.

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.