2-வது ஒருநாள்: ஆப்கானிஸ்தானுக்கு 253 ரன்கள் இலக்கு!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 252 ரன்கள் குவித்துள்ளது.


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 252 ரன்கள் குவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் இன்று (நவம்பர் 9) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்தது.
வங்கதேசம் - 252/7
டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 119 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜேக்கர் அலி 37 ரன்களும், சௌமியா சர்க்கார் 35 ரன்களும் குவித்தனர்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் நான்கேயாலியா கரோட்டி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரஷித் கான் மற்றும் அல்லாஹ் காசன்ஃபார் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...