2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ரிஷப் பந்த் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவாரென முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
நவ.24,25ஆம் தேதிகளில் சௌதி அரேபியாவில் ஐபிஎல் ஏலம் நடைபெறவிருக்கிறது.
தில்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து ரிஷப் பந்த் விடுவிக்கப்பட்டார். இந்தியாவின் அதிரடி வீரரான இவரை ஏலத்தில் எடுக்க பல அணிகள் காத்திருக்கின்றன.
111 ஐபிஎல் போட்டிகளில் 3,284 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 148.93ஆக இருக்கிறது.
ஆர்சிபி, சிஎஸ்கே, பஞ்சாப், லக்னௌ அணிகள் விருப்பம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியதாவது:
ரிஷப் பந்த ரூ.25-28 கோடிக்கு ஏலத்தில் செல்வாரென நினைக்கிறேன். இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு உரியவராக அவரே இருப்பார். கேப்டன், விக்கெட் கீப்பர் பேட்டராக பஞ்சாப் அல்லது ஆர்சிபி இவரை விலைக்கு வாங்க முயற்சிக்கும்.
தில்லி அணி ஸ்ரேயாஷ் ஐயரை ரூ.15-20 கோடிக்கு எடுக்கும். டு பிளெஸ்ஸி 10 கோடிக்கு செல்வார். எந்த அணிக்கு சென்றாலும் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் நேஹல் வதோரா, அஷ்டோஷ் ஷர்மா தலா ரூ.8 கோடிக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது என்றார்.
ஆஸி. வீரர்கள் அசத்தல்
மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அடுத்த இடத்தில் பாட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடியில் இருக்கிறார். முதலிரண்டு இரண்டு இடத்திலும் ஆஸி. வீரர்கள் இருக்கிறார்கள்.
ஆகாஷ் சோப்ராவும் ரிஷப் பந்த்தான் அதிகத் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவாரெனக் கூறியிருந்தார். மேலும், ஜேக் பிரேசர் மெக்கர்க்கை பஞ்சாப் அணி எதிர்பார்க்கும் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீண்டும் தில்லி கேபிடல்ஸில் இணைந்த ரிஷப் பந்த்! காரணம் என்ன?

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!

லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரிஷப் பந்த் விலகல்!

ஆபாசமாகப் பேசிய ரிஷப் பந்த்..! சமூக வலைதளத்தில் கடும் விமர்சனங்கள்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



