தனிப்பட்ட அவசர காரணங்களுக்காக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தாயகம் திரும்பியுள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியது.
தாயகம் திரும்பிய கௌதம் கம்பீர்
பார்டர் - கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியாவில் உள்ள கௌதம் கம்பீர், தனிப்பட்ட அவசர காரணங்களுக்காக தாயகம் திரும்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரது குடும்பத்தினருடன் இன்று (நவம்பர் 26) அதிகாலை இந்தியா திரும்பினார். தனிப்பட்ட தவிர்க்க இயலாத அவசர காரணங்களினால் அவர் தாயகம் திரும்பியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அவர் அணியுடன் மீண்டும் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற டிசம்பர் 6 முதல் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிங்க் பந்து ஆட்டத்துக்கு கௌதம் கம்பீர் ஆதரவு!

இந்திய அணிக்கு சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் நியமனம்!

தனிப்பட்ட சாதனைகளை விட அணியின் வெற்றியே முக்கியம்: வைபவ் சூர்யவன்ஷி

காயம் காரணமாக தாயகம் திரும்பிய பில் சால்ட்! ஆர்சிபிக்கு பின்னடைவா?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



