தில்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து ரிஷப் பந்த் பிரிவதை பார்ப்பதற்கு மிகவும் சோகமாக இருக்கிறது என அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.
சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் ஏலம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் அதிகபட்ச தொகைக்கு இந்திய வீரர் ரிஷப் பந்த் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவரை லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
மீண்டும் ஒன்றிணைவோம்
ஐபிஎல் மெகா ஏலத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி ரிஷப் பந்த்தை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தது. இருப்பினும், ரைட் டூ மேட்ச் தெரிவைப் பயன்படுத்தியபோது, லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூ.27 கோடி என்ற மிகப் பெரிய தொகையைக் கூறியதால், தில்லி கேபிடல்ஸ் பின்வாங்கியது.
இந்த நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து ரிஷப் பந்த் பிரிவதை பார்ப்பதற்கு மிகவும் சோகமாக இருக்கிறது எனவும், விரைவில் நாம் மீண்டும் ஒன்றிணைவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பார்த் ஜிண்டால் அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ரிஷப் பந்த் நீங்கள் எப்போதும் எனது இளைய சகோதரராக இருப்பீர்கள் என்பதை என்னுடைய ஆழ்மனதில் இருந்து உணர்வுப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களை எனது குடும்பத்தில் ஒருவராகவே நினைக்கிறேன். நீங்கள் தில்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து பிரிவதைப் பார்க்க மிகவும் சோகமாக இருக்கிறது.
நீங்கள் எப்போதும் தில்லி கேபிடல்ஸ் அணியில் இருக்கிறீர்கள். நாம் விரைவில் ஒன்றிணைவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அணிக்காக உங்களது அனைத்து பங்களிப்புக்கும் மனமார்ந்த நன்றி. நாங்கள் உங்களை எப்போதும் விரும்புகிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். நன்றாக செயல்படுங்கள். உலகம் உங்கள் காலடியில். உங்களுக்கு எனது வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததற்கான காரணம் இதுதான்: தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர்

ஐபிஎல் கடைசி லீக் போட்டி: கே.எல்.ராகுல் அரைசதம்; ஆறுதல் வெற்றி யாருக்கு?

ஆபாசமாகப் பேசிய ரிஷப் பந்த்..! சமூக வலைதளத்தில் கடும் விமர்சனங்கள்!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



