தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வலுவான நிலையில் உள்ளது.

News image

படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :28 நவம்பர் 2024, 9:45 pm IST

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வலுவான நிலையில் உள்ளது.

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (நவம்பர் 27) டர்பனில் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 191 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டெம்பா பவுமா 70 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேசவ் மகாராஜ் 24 ரன்கள் எடுத்தார்.

இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ மற்றும் லகிரு குமாரா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். விஸ்வா ஃபெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

42 ரன்களில் ஆட்டமிழப்பு

தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடியது. தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 42 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் 5 வீரர்கள் (தினேஷ் சண்டிமால், குசல் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, விஸ்வா ஃபெர்னாண்டோ, அஷிதா ஃபெர்னாண்டோ) டக் அவுட் ஆகினர். அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 13 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி ஆட்டமிழந்த மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்கோ யான்சென் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜெரால்டு கோட்ஸீ 2 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்க அணி 150-க்கும் அதிகமான ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது. அய்டன் மார்க்ரம் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 17 ரன்களுடனும், கேப்டன் டெம்பா பவுமா 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணி இலங்கையைக் காட்டிலும் 281 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.