ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷேனுக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் அந்த அணி சிறப்பாக செயல்பட தவறிவிட்டதாக விமர்சித்தனர்.
ரிக்கி பாண்டிங் அறிவுரை
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லபுஷேனுக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அறிவுரை வழங்கியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

படம் | AP
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் மற்ற பேட்ஸ்மேன்களைக் காட்டிலும், மார்னஸ் லபுஷேன் சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. கடினமான ஆடுகளத்தில் இந்தியா போன்ற வலிமையான பந்துவீச்சு வரிசை கொண்ட அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், லபுஷேன் சிறப்பாக செயல்படுவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும்.
இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டார். முதல் இன்னிங்ஸில் விளையாடியதைக் காட்டிலும் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் வித்தியாசமானவராக இருந்தார். அவரது பலம் என்னவோ அதில் கவனம் செலுத்தி சிறப்பாக விளையாடினார். விராட் கோலியைப் போல லபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் அவர்களது திறமை மீது கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும். இந்திய பந்துவீச்சாளர்கள் மீது இவர்கள் அழுத்தம் கொடுத்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்துள்ள நிலையில், இரண்டாவது போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்எல்சி தொடரில் 500 ரன்களை கடந்த ஸ்டீவ் ஸ்மித்..! புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்!

உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணியின் திட்டம் என்ன? கேப்டன் பதில்!

அணியின் நலனுக்கு முன்னுரிமையளித்த வீரர்கள்; முன்னாள் இந்திய கேப்டன் பாராட்டு!

இந்தியாவில் கிரிக்கெட் அகாடெமி தொடங்கும் முன்னாள் ஆஸி. கேப்டன்?
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



