இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் முழங்கால் காயத்தால் பாதியில் வெளியேறினார்.
நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் கீப்பிங் செய்து கொண்டிருந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் முழங்கால் காயத்தால் பாதியிலேயே வெளியேறினார்.
2022 ஆம் ஆண்டு டிசம்பரில் கார் விபத்தின் போது ஏற்பட்ட கடுமையான முழங்கால் காயங்களில் இருந்து ரிஷப் பந்த் குணமடைந்துவிட்ட காலில் வீக்கம் இருப்பதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

காயத்தால் மைதானத்தில் இருந்து வெளியேறிய ரிஷப் பந்த்
நியூஸிலாந்து இன்னிங்ஸின் 37வது ஓவரில், ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் டெவோன் கான்வேக்கு எதிரான ஸ்டம்பிங் வாய்ப்பை தவறவிட்ட பந்த், பந்தை பிடிக்கத் தவறியதால் முழங்காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக களத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங் பணியை கவனித்தார்.
இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “ரிஷப் பந்துக்கு விபத்து ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்த காலில் துரதிருஷ்டவசமாக பந்து நேரடியாக தாக்கியது. காலின் தசைகள் மிகவும் மெதுவானவை. அந்தக் காலில் பந்து தாக்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக அவர் வெளியேற்றப்பட்டார். அவரது காயங்கள் குணமடைந்ததும் அவர் நாளை களத்திற்கு திரும்புவார்” என்றார்.
முன்னதாக, பெங்களூருவில் நடந்தப் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதன்பின்னர், நியூஸிலாந்து அணி 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு திரும்பினாா் ரிஷப் பந்த்

மீண்டும் தில்லி கேபிடல்ஸில் இணைந்த ரிஷப் பந்த்! காரணம் என்ன?

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!

லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரிஷப் பந்த் விலகல்!
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK



