இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடிய அறிமுக வீரர் கம்ரான் குலாமை பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் பாராட்டியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அதன் சொந்த மண்ணில் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
அறிமுக வீரருக்கு பாராட்டு
பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமுக்கு மாற்று வீரராக கம்ரான் குலாம் அணியில் சேர்க்கப்பட்டார். பாகிஸ்தான் அணியில் அறிமுக வீரராக களம் கண்ட கம்ரான் குலாம் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி பாகிஸ்தான் அணிக்கு உதவினார். அவர் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் 26 ரன்கள் எடுத்தார்.

கம்ரான் குலாம் - படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடிய அறிமுக வீரர் கம்ரான் குலாமை பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான பாபர் அசாமின் இடத்தை நிரப்புவது ஒருபோதும் அவ்வளவு எளிது கிடையாது. பாபர் அசாம் இடத்தில் கம்ரான் குலாம் சிறப்பாக விளையாடினார். முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பு கம்ரான் குலாம் கடந்து வந்த கடினமான சூழல்களை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால், நாங்கள் அவருக்கு ஆதரவாக இருந்தோம். அறிமுகப் போட்டியில் அவர் சதம் விளாசியது சிறப்பானது என்றார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் சமன் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சர்ச்சையில் சிக்கிய வீரருக்கு கேப்டன் பொறுப்பு... ஆசிய போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் மிகவும் முக்கியம்; அறிமுக வீரர் மானவ் சுதர் கூறியதென்ன?

அறிமுக போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர் அராஃபத் மின்ஹாஸ்!

பாபர் அசாமுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமா?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



