உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

உணவு இடைவேளை: 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!

சென்னையில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி.

Published On :

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியினர், 2 டெஸ்ட் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்தியாவின் டாப் ஆர்டர்களான ரோஹித் (6), ஷுப்மன் கில் (0), விராட் கோலி (6) சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.

அசத்தும் இளம் வங்கதேச வீரர்

இந்த 3 முக்கிய விக்கெட்டினையும் வங்கதேசத்தின் 24 வயதாகும் ஹாசன் மஹ்முத் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஹாசன் மஹ்முத் 3 டெஸ்ட்டில் 14 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

தற்போது உணவு இடைவேளைவரை 23 ஓவர்களுக்கு இந்திய அணி 88/3 ரன்கள் எடுத்துள்ளது.

ஜெய்ஸ்வால் 37, ரிஷப் பந்த் 33 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

அசத்தும் வங்கதேச வீரர் ஹாசன் மஹ்முத்.

அசத்தும் வங்கதேச வீரர் ஹாசன் மஹ்முத். - R Senthilkumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.