திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து வங்கதேச வீரர் சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் வங்கதேச மூத்த வீரர் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்தது தொடர்பாக...

News image

படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :21 செப்டம்பர் 2024, 9:43 pm IST

சர்வதேச கிரிக்கெட்டில் வங்கதேச வீரர் முஷ்ஃபிகர் ரஹிம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது.

சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள்

இந்த போட்டியில் வங்கதேச வீரர் முஷ்ஃபிகர் ரஹிம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 8 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 13 ரன்களும் குவித்த ரஹிம் சர்வதேச போட்டிகளில் வங்கதேச அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக மாறி சாதனை படைத்துள்ளார்.

முஷ்ஃபிகர் ரஹிம்

முஷ்ஃபிகர் ரஹிம் - படம் | AP

சர்வதேச போட்டிகளில் முஷ்ஃபிகர் ரஹிம் 15,194 ரன்கள் குவித்துள்ளார். முன்னதாக, வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் 15,192 ரன்களுடன் வங்கதேச அணிக்காக அதிக ரன்கள் குவித்தவராக இருந்தார். தற்போது அவரை பின்னுக்குத் தள்ளி முஷ்ஃபிகர் ரஹிம் முதலிடம் பிடித்துள்ளார்.

14,696 ரன்களுடன் ஷகிப் அல் ஹசன் மூன்றாவது இடத்திலும், 10,694 ரன்களுடன் மஹ்மதுல்லா நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.