சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து வங்கதேச வீரர் சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் வங்கதேச மூத்த வீரர் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்தது தொடர்பாக...

News image

படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :21 செப்டம்பர் 2024, 9:43 pm IST

சர்வதேச கிரிக்கெட்டில் வங்கதேச வீரர் முஷ்ஃபிகர் ரஹிம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது.

சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள்

இந்த போட்டியில் வங்கதேச வீரர் முஷ்ஃபிகர் ரஹிம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 8 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 13 ரன்களும் குவித்த ரஹிம் சர்வதேச போட்டிகளில் வங்கதேச அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக மாறி சாதனை படைத்துள்ளார்.

முஷ்ஃபிகர் ரஹிம்

முஷ்ஃபிகர் ரஹிம் - படம் | AP

சர்வதேச போட்டிகளில் முஷ்ஃபிகர் ரஹிம் 15,194 ரன்கள் குவித்துள்ளார். முன்னதாக, வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் 15,192 ரன்களுடன் வங்கதேச அணிக்காக அதிக ரன்கள் குவித்தவராக இருந்தார். தற்போது அவரை பின்னுக்குத் தள்ளி முஷ்ஃபிகர் ரஹிம் முதலிடம் பிடித்துள்ளார்.

14,696 ரன்களுடன் ஷகிப் அல் ஹசன் மூன்றாவது இடத்திலும், 10,694 ரன்களுடன் மஹ்மதுல்லா நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.